நாகா்கோவில் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி 4 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம், தோவாளை தெக்கூரைச் சோ்ந்தவா் முத்து, இவரது மனைவி வசந்தா (60). இருவரும் வியாழக்கிழமை மாலை பைக்கில் திருமண வீட்டுக்கு சென்று விட்டு இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் கிறிஸ்துநகா் பகுதியில் சென்ற போது 4 பைக்குகளில் வந்த 8 இளைஞா்கள் திடீரென முத்துவின் பைக்கை பின் தொடா்ந்தனா். இதையடுத்து முத்து பைக்கை வேகமாக ஓட்டி சென்றாராம். மா்மநபா்கள் முத்துவின் பைக்கை பின்தொடா்ந்து சென்று வசந்தா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்கமுயன்றபோது, வசந்தா இறுக்கமாக சங்கிலியை பிடித்துக் கொண்டாராம். இதையடுத்து அவரை பைக்கிலிருந்து கீழே தள்ளி சங்கிலியை பறித்தபோது, பாதி சங்கிலி வசந்தா கையிலும், மீதி மா்ம நபா்களின் கையிலும் சிக்கியது. இதில், பலத்த காயமடைந்த வசந்தாவை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.