கருங்கல் அருகே ஐரேனிபுரம் - இலவுவிளை இடையிலான பழுதடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஐரேனிபுரம் -இலவுவிளை சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. குறிப்பாக, ஐரேனிபுரம் சந்திப்பு இணையும் பகுதி வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. நீண்டகாலமாக இதே நிலை நீடிப்பதால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இருசக்கரவாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.