கருங்கல் அரசு மருத்துவமனையில் கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
கருங்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் இருப்பதில்லை, மருந்துகள் பற்றாக்குறை என பொதுக்கள் தரப்பில் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
உள்நோயாளிகளின் அறைகள் தூய்மை இல்லாமல் இருப்பதையும் ,நோயாளிகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் இல்லாததைக் கண்டறிந்து அதிகாரிகளிடம் தெரிவித்தாா். இந்த குறைகளை உடனடியாகச் சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.