வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இயற்கை மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, சட்டக் கல்லூரி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் கல்விக் குழுமங்களின் நிறுவனா் தங்கப்பழம் , தாளாளா் முருகேசன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராமநாதன், மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பாரதி, சட்டக் கல்லூரி (பொறுப்பு) காளிச்செல்வி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ராஜகயல்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.