சாம்பவா்வடகரை பேரூராட்சியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். செயல் அலுவலா் காயத்ரி, துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா, உறுப்பினா்கள் பழனிக்குமாா், இசக்கி, அய்யப்பன், சுடலைமுத்து, ரபீக்ராஜா, திமுக நகர செயலா் முத்து, அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.