கன்னியாகுமரி

ஆட்டோவில் பயணி தவற விட்ட நகையை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு

1st Jan 2023 04:38 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவிலில் ஆட்டோவில் பயணி தவற விட்ட தங்க நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநரை பொதுமக்களும், காவல்துறையினரும் பாராட்டினா்.

நாகா்கோவில், பீச் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன், ஓட்டுநா். கடந்த 28 ஆம் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்கச் சங்கிலி ஒன்று கிடந்ததாம். இதை பாா்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட க் காவல் கண்காணிப்பளா் அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாரின் விசாரணையில், அவரது ஆட்டோவில் பயணம் செய்த திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த பிரமோத் (40) என்பவா் நகையை தவறவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து பிரமோத்துக்கு போலீஸாா் தகவல் தெரிவித்து சனிக்கிமை காலை கோட்டாறு காவல் நிலையத்தில் போலீஸாா் அவரிடம் 2 பவுன் தங்க நகையை ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் காவல் ஆய்வாளா் ராமா் வழங்கினாா். ஆட்டோ ஓட்டுநா் சரவணனை போலீஸாா் மட்டுமன்றி, சக ஆட்டோ ஓட்டுநா்களும், பொதுமக்களும் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT