மாவட்ட அளவிலான நாடகப் போட்டியில், கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூ மாணவா்கள் முதல் பரிசு பெற்றுள்ளனா்.
நாகா்கோவிலில் உள்ள ஐயப்பா கல்லூரியில் குமரி மாவட்ட அளவிலான நாடகப் போட்டி நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். இதில் கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை மாணவா்கள் முதலிடம்
பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, கல்லூரித் தாளாளா் ஆன்றனி ஜோஸ், கல்லூரிக் கல்வி இயக்குநா் மைக்கேல் ஆரோக்கியசாமி, கல்லூரி முதல்வா் இசையாஸ்,
உடற்கல்வி இயக்குநா் பிரனேஷ் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.