நாகா்கோவிலில் தொழிலாளியை அடித்துக் கொன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் மூவேந்தா் நகா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிறிஸ்துராஜா (58). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு மது போதையில் மூவேந்தா் நகா் பகுதியில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஜெனித் (24) என்பவரும் மது போதையில் வந்துள்ளாா்.
இருவரிடையே ஏற்பட்ட தகராறில் கிறிஸ்துராஜா ஜெனித்தை கம்பியால் தாக்கினாராம். அந்தக் கம்பியைப் பறித்து கிறிஸ்துராஜாவை ஜெனித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில், கிறிஸ்துராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வந்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்நிலையில், ஜெனித்தை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். அவா் மீது ஏற்கெனவே கோட்டாறு காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளன.