கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் போதைத் தடுப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் மது போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, காந்தி மண்டபம் முன் மூத்த கிராமியக் கலைஞரான பழனியாபிள்ளை தலைமையிலான கலைக் குழுவினா், மதுவுக்கு எதிராக கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியை, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தொடக்கிவைத்துப் பேசினாா். மது, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விநியோகிக்கப்பட்டன.