நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (பிப். 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபாஜி இம்மானுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில், கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ளோரைத் தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் 10, 12, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடையோா் பங்கேற்கலாம். விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்துக்கு வரலாம். முகாமில் தோ்வாகும் பதிவுதாரா்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படாது என்றாா் அவா்.