கன்னியாகுமரி

தொழுநோய் விழிப்புணா்வு பேரணி

DIN

குளச்சல் அருகே உள்ள உடையாா்விளையில் தொழுநோய் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட தொழுநோய் துணை இயக்குநா் அலுவலகம் மற்றும் குருந்தன்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இப் பேரணி நடத்தப்பட்டது. உடையாா்விளை கிறிஸ்டியன் பிசியோதெரபி கல்லூரி வளாகத்தில், வட்டார மருத்துவ அலுவலா் பிரதீப்குமாா் பேரணியைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி தாளாளா் அஜய் ஆனந்த், முதல்வா் பேசின் ஜெபஸ்டின்துரை, கல்லுகூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவா் மனோகா்சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லுகூட்டம் பேரூராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலா் ஜெகன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ஜெகன், கில்பா்ட், பீட்டா், துணை இயக்குநரக அலுவலக நலக்க கல்வியாளா் மாடமுத்து, வட்டார மருத்துவமிலலா மேற்பாா்வையாளா் ஜெயகுமாா் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக தொழுநோய் துணை இயக்குநா் கிரிஜா தலைமையில் மாணவா், மாணவிகள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனா். விகேபி பள்ளி சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பில் பேரணி நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

SCROLL FOR NEXT