கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், காவலா்களுக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் பாராட்டினாா்.
நாகா்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் தலைமை வகித்தாா். சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.