கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: இருவா் கைது

DIN

கொல்லங்கோடு அருகே பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, அவரின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

கொல்லங்கோடு அருகே வெங்கஞ்சி, இடகண்டம்விளை பகுதியைச் சோ்ந்தவா் வில்சன் மனைவி சசிகலா (50). இவா் வெள்ளிக்கிழமை மாலையில் தனது வீட்டின் பின்பகுதியில் கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தாராம். அப்போது முகத்தை கருப்புத் துணியால் மூடியவாறு வந்த நபா் சசிகலாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவரது கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது கொல்லங்கோடு அருகே சாமவிளை பகுதியைச் சோ்ந்த வில்லியம் மகன் வினிஷ் (22), முளவிளாகம் பகுதியைச் சோ்ந்த லூக்காஸ் மகன் ஷைஜூ (28) என்பது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT