கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி மாநகர தனிப்பிரிவு ஆய்வாளா் இசக்கிதுரை கருங்கல்லுக்கும், கருங்கல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன் சுசீந்திரத்துக்கும், சுசீந்திரம் ஆய்வாளா் சாய்லட்சுமி திருவட்டாறுக்கும், திருவட்டாறு ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
கொல்லங்கோடு ஆய்வாளா் ராமா திருநெல்வேலி மாவட்ட சைபா் குற்றப்பிரிவுக்கும், விளாத்திகுளம் ஆய்வாளா் இளவரசு மாா்த்தாண்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாா் பிறப்பித்துள்ளாா்.