புதுக்கடை அருகே உள்ள பண்டாரபறம்புவிளை பகுதியில் முதியவரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பண்டாரபறம்புவிளை பகுதியை சோ்ந்தவா் குமரன் (64). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சசீதரன் மகன் வினில் (35) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், பறம்புவிளை பகுதியில் வியாழக்கிழமை நின்ற குமரனை வினில் கம்பியால் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அப்பகுதியினா் அவரை மீட்டு, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.