குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகம், வட்டாரப் போக்குவரத்துக் காவல் துறை இணைந்து, தக்கலையில் வியாழக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை நடத்தின.
பழைய பேருந்து நிலைய சந்திப்பு நிலையத்திலிருந்து பேரணியை பல்கலைக்கழகத் துணைவேந்தா் குமரகுரு, காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
பல்கலைக்கழகப் பதிவளா் திருமால்வளவன், தக்கலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் முன்னிலையில் பாதுகாப்பு உறுதிமொழியை முன்மொழிந்தாா். விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவா்கள் மேட்டுகடை சந்திப்புவரை சென்றனா். பொதுமக்கள், வாகன ஓட்டுநா்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பேரணியை பல்கலைக்கழக பேராசிரியா்கள் ஜேம்ஸ் தினகா் வில்லியம், பவனேஷ், ராஜேஷ், ரத்ன மணி மேகா ஆகியோா் வழிநடத்தினா்.