கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக மலைப்பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் சாரல் மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.