கன்னியாகுமரி

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பூஜை நேரம் மாற்றம்

DIN

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழாவையொட்டி மராமத்து பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை(பிப்.3 ) முதல் பிப். 20 ஆம் தேதி வரை பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக் கோயிலில் நிகழாண்டு தூக்கத் திருவிழா மாா்ச் 16 ஆம் தேதி தொடங்குகிறது. வரலாற்று சிறப்பு மிக்க தூக்க நோ்ச்சை மாா்ச் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் உள்ள அம்மன் திருமுடியில் வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளதால் பிப். 3 முதல் பிப். 20ஆம் தேதி வரை மதியபூஜை 10 மணிக்கு நடத்தப்பட்டு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பின்னா் மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என கோயில் செயலா் மோகன்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT