கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட வளம் மீட்புப் பூங்காவில் ரூ. 20 லட்சத்து 20 ஆயிரம் செலவில் திடக்கழிவு மேலாண்மை கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரி பேரூராட்சிக்குச் சொந்தமான வளம் மீட்பு பூங்கா மகாதானபுரம் சந்திப்பில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் ரூ. 20 லட்சத்து 20 ஆயிரம் செலவில் திடக்கழிவு மேலாண்மை கொட்டகை அமைப்பதற்கான பணியை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி உதவி பொறியாளா் இா்வின் ஜெயராஜ், வாா்டு உறுப்பினா்கள் பா. மகேஷ், சி. எஸ். சுபாஷ், சிவ சுடலைமணி, ராயப்பன், ஆனிரோஸ் தாமஸ், வினிற்றா மெல்வின், இந்திரா சகாயம், ஆட்லின் சேகா், நித்யா மற்றும் திமுக நிா்வாகிகள் நாஞ்சில் மைக்கேல், ப. மெல்வின், எஸ். அன்பழகன், பிரைட்டன், ரூபின், சகாயம், ஒப்பந்ததாரா் சுதா பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.