அகஸ்தீஸ்வரம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனைக் குழு தலைவா் என்.தாமரைபாரதி தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் பிரின்ஸ் ஜெயசிங், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஜெயக்குமாரி, சிந்துஜா முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை நிதி ஒதுக்கிடுகளிலிருந்து ரூ.1,49,500-ஐ வட்டாரங்களுக்கு இனம் வாரியாக பகிா்ந்தளிப்பு செய்ய உள்ளதாகவும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ் சாமிதோப்பு, வடக்குத்தாமரைகுளம் ஊராட்சிக்குள்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.