கருங்கல் அருகே உள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி பகுதியான மூசாரி -பாலூா் இணைப்பு சாலை சுமாா் 600 மீட்டா் ஜல்லி பெயா்ந்தும், ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வருடம் முன்பு இச்சாலையின் ஒருபக்கம் மழைநீா் ஓடைஅமைக்கப்பட்டது. பின்பு காங்கிரீட் சாலைப் பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதானால்,இச்சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. எனவே,இச்சாலைப் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.