களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (34). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் அஜித்குமாா் புதன்கிழமை தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
களியக்காவிளை போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.