ஆற்றூரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வித்யாஸ்ரீ முன்னிலை வகித்தாா். திருவட்டாறு வட்டார தோட்டக்கலை உதவிஅலுவலா் ஞானதயாசிங், ஊட்டச்சத்து நிபுணா் ஜாஸ்மின் நிஷா ஆகியோா் பேசினா்.
ஓவியம், சிறுதானிய உணவு தயாரிக்கும் போட்டிகள் நடைபெற்றன. அங்கன்வாடிப் பணியாளா்களால் பாரம்பரிய உணவு விழிப்புணா்வுக் கண்காட்சி நடத்தப்பட்டது.