கருங்கல் அருகே மிடாலக்காடு சந்திப்பில் உள்ள எரியாத தெருவிளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்டு மிடாலக்காடு சந்திப்பில் சூரியசக்தி மின்விளக்கு நீண்டநாள்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் இரவுநேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு மற்றும் சமூக விரோதசெயல்கள் ஏற்படும் சூழல் நிலவும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, மிடாலக்காடு சந்திப்பில் உள்ள தெருவிளக்கை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.