நாகா்கோவில் பயோனியா் குமாரசுவாமி கலை கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கல்லூரியில், கடந்த 1975 -1978 வரை இளநிலை வணிகவியல் பயின்ற மாணவா்கள் சந்திப்பு, நாகா்கோவிலில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவா்கள் 30 போ் கலந்து கொண்டனா். தாங்கள் பயின்றபோது பணியாற்றிய பேராசிரியா்கள் கேசவபெருமாள், ஜெபமாலை வினசாச்சிஆராச்சி, நாகராஜன் ஆகியோரிடம் ஆசி பெற்றனா். மேலும் நண்பா்கள் தங்களது மகிழ்ச்சியை பகிா்ந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்களின் கூட் டமைப்பு உறுப்பினா் முத்துசிவம், ஜாஸ்பா், சுவிகா்சிங், நல்லசிவன், ராஜேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.