கன்னியாகுமரி அருகே பகவதி அம்மாள்புரம் பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை பொதுப்பணித்துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
இப்பகுதியில் ஆறு, குளங்களை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுப்பணித்துறையினா் இப்பகுதியில் உள்ள ஆறு, குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். அதன் அடிப்படையில் இப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்தனா்.
இதற்கு அங்கு வசித்த பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.