கன்னியாகுமரி

குமரி அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

DIN

கன்னியாகுமரி அருகே பகவதி அம்மாள்புரம் பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை பொதுப்பணித்துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

இப்பகுதியில் ஆறு, குளங்களை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுப்பணித்துறையினா் இப்பகுதியில் உள்ள ஆறு, குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். அதன் அடிப்படையில் இப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்தனா்.

இதற்கு அங்கு வசித்த பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT