அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தலைமை வகித்தாா். இதில், கரும்பாட்டூா் ஊராட்சி அலுவலகம் முதல் மணக்குடி சாலை வரையிலான சாலைக்கு ஜல்லி வைத்து தாா்ச்சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புஷ்பரதி, நீலபாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் சண்முகவடிவு, உறுப்பினா்கள் ராஜேஷ், அருண்காந்த், பால்தங்கம், ஆரோக்கிய சவுமியா, பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.