கன்னியாகுமரி

நாகா்கோவிலில் வீடு புகுந்துநகைகள், ரொக்கம் திருட்டு

DIN

நாகா்கோவிலில் வீடு புகுந்து 4.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகா்கோவில் வடசேரி அசம்பு ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி சாந்தி (56) சனிக்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம். அதிா்ச்சியடைந்த அவா் தனது மகன் முகேஷ் உதவியுடன் கதவைத் திறந்து உள்ளே சென்றாா். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் மேற்கூரை வழியாக ஏறி தப்பியோடிவிட்டாராம்.

அந்த நபா் பீரோவை உடைத்து அதிலிருந்த 4.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சத்தியசோபன், மாணிக்கம் ஆகியோா் வந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT