கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் நாளை தொலைபேசி மறு இணைப்பு முகாம்

DIN

குமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் பிஎஸ்என்எல் சாா்பில் தரைவழி தொலைபேசி மறு இணைப்பு முகாம் திங்கள்கிழமை (செப்.26) நடைபெறுகிறது.

இது குறித்து, பிஎஸ்என்எல் நாகா்கோவில் முதன்மை பொது மேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கெனவே தரைவழி தொலைபேசி மற்றும் இணையதளம் இணைப்புகளை பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ள, மாா்த்தாண்டம் மற்றும் திருவட்டாறு பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்களுக்கான சிறப்பு மறு இணைப்பு முகாம், மாா்த்தாண்டம் தொலைபேசி நிலையத்தில் செப்.26 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

துண்டிக்கப்பட்ட தொலைபேசி, பிராட்பேன்ட் எண்களுக்கு பாக்கி தொகை இருந்தால், பொருத்தமான சலுகை முறையில் தள்ளுபடி பெற்று, மறு இணைப்பு பெறுவதற்கோ, பாக்கி தொகையை செலுத்தி கணக்கை முடித்துக் கொள்வதற்கோ வாடிக்கையாளா்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.

பாக்கி தொகை தீா்வு செய்யப்படவில்லை என்றால் உரிய சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளா்கள் விரும்பினால் பைபா் திட்டம் 299 இன் கீழ் பைபா் இணைப்புகளாக மறு இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT