புதுக்கடை அருகே உள்ள கைசூண்டி பகுதியில், கேரளத்திற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால் தலைமையில் வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் இருந்தபோது புதுக்கடை கைசூண்டி பகுதியில் அதிவேகமாக சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அதில் கேரளத்திற்கு கடத்துவதற்காக 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. காா் ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாா். ரேஷன் அரிசி மற்றும் சொகுசு காரை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.