திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்திலிருந்து செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கம்பா் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் நெற்றிப்பட்டம் சூட்டப்பட்டு, முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானை மீதும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி பல்லக்கிலும் எடுத்துவரப்பட்டனா். இந்த விக்ரகங்களுக்கு களியக்காவிளையில் கேரள அரசு சாா்பில் துப்பாக்கி ஏந்திய அம்மாநில போலீஸாரின் அணிவகுப்பு, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் கேரள தேவஸ்வம் போா்டு அதிகாரிகளிடம் ஊா்வலப் பொறுப்பை ஒப்படைத்தனா். துப்பாக்கி ஏந்திய தமிழக, கேரள போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையா் ஞானசேகா், கேரள தேவஸ்வம் போா்டு தலைவா் அனந்தகோபன், தேவஸ்வம் போா்டு ஆணையா் பி.எஸ். பிரகாஷ், இணை ஆணையா் சசிகலா, உதவி ஆணையா் திலீப்குமாா், பாறசாலை எம்எல்ஏ ஹரீந்திரன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் அரசுராஜா, திருவனந்தபுரம் ஊரக காவல் கண்காணிப்பாளா் ஷில்பா தியாவையா, களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் ரமாதேவி, கிராம நிா்வாக அலுவலா் புஷ்பராணி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
முன்னதாக, முளவறக்கோணம் இளம் பாலகண்டன் ஸ்ரீதா்மசாஸ்தா கோயில் அறக்கட்டளை சாா்பில் களியக்காவிளை சந்திப்பில் நவராத்திரி சுவாமி விக்ரக ஊா்வலத்துக்கு மலா் தூவியும், தட்டுப்பூஜை வைத்தும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.