கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நவராத்திரி சங்கீத விழா, வித்யாரம்பம் திங்கள்கிழமை (செப். 26) தொடங்கி, அக். 5ஆம் தேதி நிறைவடைகிறது.
விழா நாள்களில் நாள்தோறும் அதிகாலை 5 மணிமுதல் வழக்கமான தினசரி பூஜைகள், மாலை 5.30 மணிமுதல் நெய்யாற்றின்கரை எஸ்.பி. இசைப் பள்ளி மாணவா்களின் சங்கீத இசை நிகழ்ச்சிகள், மாலை 6.30 மணிக்கு மாலை தீபாராதனை, இரவு 7.45 மணிக்கு நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். அக். 5ஆம் தேதி காலை 8 மணிமுதல் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என கோயில் செயலா் மோகன்குமாா் தெரிவித்துள்ளாா்.