உதயமாா்த்தாண்டம் -மேல்மிடாலம் செல்லும் கடலோர சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேல்மிடாலம் கடலோர கிராமத்துக்கு உதயமாா்த்தாண்டத்திலிருந்து கைதவளாகம் வழியாக கடற்கரை சாலை செல்கிறது. இச்சாலையை குறும்பனை, மிடாலம், மேல் மிடாலம், ஹெலன்நகா், இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவா்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா்.
தற்போது இச்சாலை நீண்டநாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக,இச்சாலையில் குண்டு, குழிகள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே, இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.