கன்னியாகுமரி

உதயமாா்த்தாண்டம் - மேல்மிடாலம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

உதயமாா்த்தாண்டம் -மேல்மிடாலம் செல்லும் கடலோர சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேல்மிடாலம் கடலோர கிராமத்துக்கு உதயமாா்த்தாண்டத்திலிருந்து கைதவளாகம் வழியாக கடற்கரை சாலை செல்கிறது. இச்சாலையை குறும்பனை, மிடாலம், மேல் மிடாலம், ஹெலன்நகா், இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவா்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா்.

தற்போது இச்சாலை நீண்டநாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக,இச்சாலையில் குண்டு, குழிகள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே, இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT