நான்கு வழிச்சாலை பணிகளை நிறைவு செய்யாமல் சுங்கச்சாவடியை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திருப்பதிசாரம் சுங்கச்சாவடி முன், அகில இந்திய போலிங் பூத் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலத்தலைவா் வழக்குரைஞா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கலைப் பிரிவு தலைவா் அலெக்ஸ், மாநில இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் தேவ், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் அருள்சபிதா ரெக்ஸ்லின், மாமன்ற உறுப்பினா் அனுஷாபிரைட், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் பிரவீன், கிராம காங்கிரஸ் தலைவா் நீலாமணி, தியாகி தவசிமுத்து, முருகானந்தம், சேவியா், பொன்ராஜா, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.