கன்னியாகுமரி

அருமனை அருகேவிபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

12th Sep 2022 12:57 AM

ADVERTISEMENT

அருமனை அருகே மின் கம்பத்தில் பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

அருமனை அருகேயுள்ள ராமவா்மன் சிறையைச் சோ்ந்த கிறிஸ்டல் ராஜ் மகன் ஆஷிஷ் (19). இவா் கடந்த 2ஆம் தேதி செம்மங்காலை பகுதியில் பைக்கில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதாம். இதில் காயமடைந்த அவா் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT