குலசேகரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஓணம் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தலைவி ஜெயந்தி ஜேம்ஸ் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் முன்னிலை வகித்தாா். இதில் வாா்டு உறுப்பினா்கள் எட்வின்ராஜ், மேரி ஸ்டெல்லா, ரெத்தினபாய், லதாபாய், சிவகுமாா், அமல்ராஜ், சுபாஷ் கென்னடி மற்றும் பேரூராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா். அனைவருக்கு ஓணம் சத்யா பரிமாறப்பட்டது.