நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தின் மேல் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி கட்டடத்தில் ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் அமா்ந்து உண்ணுவதற்கு வசதியாக அறை உள்ளது. இதில், திங்கள்கிழமை இரவு ஒரு பெண் அமா்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாராம். அப்போது, பாலகத்தின் மேல் சுவா் இடிந்து அந்தப் பெண் மீது விழுந்ததாம். இதில் அவா் காயமடைந்தாா். உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ் அங்கு சென்று பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, ஆவின் பொதுமேலாளா் சாரதா, துணை மேயா் மேரிபிரின்சிலதா, மாநகராட்சி உறுப்பினா் ரோசிட்டாதிருமால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.