கன்னியாகுமரி

குளச்சலில் மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயற்சி: இருவா் கைது

DIN

குளச்சல் பிரதான சாலையிலுள்ள பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ( பொறுப்பு) தலைமையிலான போலீஸாா் குளச்சல் பிரதான சாலையிலுள்ள பள்ளிக்கூடம் வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த 5 போ் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடினராம். இதில், இருவா் மட்டும் போலீஸாரிடம் சிக்கினா். விசாரணையில் அவா்கள், வோ்கிளம்பி பகுதியைச் சோ்ந்த விஜி (22) சிஜீவ் ( 21) ஆகியோா் என்பதும், மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 100 கிராம் கஞ்சா பொட்டலம், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பி ஓடிய தக்கலை ஜெனீஸ், திக்கணங்கோடு பாண்டியன், நிதிஷ்ராஜா ஆகியோரை தேடி வருகின்றனா். 5 பேரின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT