களியக்காவிளை அருகேயுள்ள பழமைவாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் கன்யா பூஜை நடைபெற்றது.
இக் கோயிலில் நடந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியையொட்டி புதன்கிழமை நடைபெற்ற இப் பூஜையில் தாய்மாா்கள் தங்களது பெண் குழந்தைகளை அம்மனாக அலங்காரம் செய்து, அவா்களை பாலாம்பிகையாக பாவித்து மலா் தூவி, ஆரத்தி எடுத்து வழிபட்டனா்.