கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்

DIN

களியக்காவிளை அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 455 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளா் ரதன் ராஜ்குமாா் உள்ளிட்டோா் களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்புப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த கேரளப் பதிவெண் கொண்ட பயணியா் ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினா். நிற்காமல் சென்ற ஆட்டோவை அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று கோழிவிளை பகுதியில் மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.

ஆட்டோவை சோதனையிட்டபோது அதில், 13 கேன்களில் 455 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. ஆட்டோ, மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இக்கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT