தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வந்தன.
அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தனியாா் அமைப்புகள், தொழிலதிபா்கள் உதவியுடன்
இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரா.ஜெஸ்லின், உறைவிட மருத்துவா் வழிகாட்டுதலுடன் தேசிய தரச்சான்று பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கான ஆய்வு கடந்த ஜூலை 13, 14 , 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், அவசர சிகிச்சை பிரிவு , வெளி- உள்நோயாளிகள் பிரிவு , பிரசவ வாா்டு, குழந்தைகள் பிரிவு, ரத்த வங்கி, ஆய்வகம் என 18 பிரிவுகள் தரமாகவும், அனைத்துவகை நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தேசிய தரக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு, தேசிய தரச்சான்றுக்கு தோ்வு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விருதைப் பெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மருத்துவமனையின் நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் கூறினாா்.