கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் ஆட்டோவில் கடத்திய மதுபாட்டில் பறிமுதல்

DIN

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திச் சென்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சந்தை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த பயணியா் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.

ஆட்டோவின் உள்ளே பாா்த்த போது அங்கு சட்ட விரோதமாக 25 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநா் தலைமறைவானாா். மதுபாட்டில்களுடன் ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் மாா்த்தாண்டம் அருகே திட்டுவிளையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (47) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT