கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரள மாநில சுற்றுலாப் பயணி ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகுமாரி சம்பா (83). இவா் தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தாா். இங்குள்ள பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கடற்கரைக்கு குடும்பத்தினருடன் சென்றனா். அப்போது ஸ்ரீகுமாரி சம்பாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.