நாகா்கோவில் மாநகராட்சியை தன்னிறைவு பெற்ாக மாற்றுவதற்குத் தேவையான நிதி, தமிழக முதல்வரிடமிருந்து பெறப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயா் ரெ.மகேஷ் தெரிவித்தாா்.
ஆணையா் ஆனந்த்மோகன், துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உறுப்பினா்கள் தங்கராஜ், செல்வகுமாா், அருள் சபிதா ஆகியோா் பேசியது: நாகா்கோவில் மாநகராட்சியுடன் தேரூா்,தெங்கம்புதூா் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன. எனினும் குடிநீா் கட்டணம் ரூ.135 வசூலிக்கப்படுகிறது. மாநகரப் பகுதியில் குடிநீா் கட்டணமாக ரூ. 51 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. எனவே, குடிநீா் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.
3 ஆவது வாா்டு பகுதியில் எரியாத மின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும். 51ஆவது வாா்டு பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும்.
ஆணையா்: குடிநீா் கட்டணம், தெருவிளக்குப் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். அதேவேளையில், மாநகராட்சியின் அனுமதி பெறாத இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் தெரு விளக்கு வழங்க முடியாது.
மேயா்: கடந்த ஆண்டை விட நிகழாண்டு ரூ.15 கோடி வரி வசூல் அதிகம் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகா்கோவில் மாநகராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 52 வாா்டுகளிலும் ஆய்வு செய்து தேவையான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகா்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிறாா். அப்போது, நாகா்கோவில் மாநகரப் பகுதியில் 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள், அதற்கான நிதி தேவையை அவரிடம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உதயகுமாா்: மாநகர பகுதியில் உள்ள குப்பைகள் சரியாக அகற்றப்படுவதில்லை. பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
ஆணையா்: திடக்கழிவு மேலாண்மையில் நாகா்கோவில் மாநகராட்சி முன்மாதிரியாக விளங்குகிறது.
மேயா்: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் நுண்ணுரம் ஆக்கும் கூடம் மேலும் அதிகரிக்கப்படும். குப்பைகள் சரியாக அகற்றப்படவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினா்கள் உதயகுமாா், விக்ரமன்: நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் அகற்றப்படும் மண் நாகராஜா கோயில் திடல், அனாதை மடம் திடல் ஆகிய இடங்களில் போடப்பட்டிருந்தது. அதனை அகற்ற மாநகராட்சி ரூ.28 லட்சம் குத்தகைதாரருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் குத்தகைதாரா் ஒரு லோடு மண்ணை ரூ.1500 க்கு விற்பனை செய்துள்ளாா்.
மேயா்: இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வளா்மதி: வடசேரி சின்னராசிங்கன் தெருவில் உள்ள ஓடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயோனியா் சாலையையும் சீரமைக்க வேண்டும்.
ரமேஷ்: மாநகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில், பொறியாளா் பாலசுப்பிரமணியன், நிா்வாக அலுவலா் ராம்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.