கருங்கல் அருகே உள்ள மாமூட்டுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மாமூட்டுக்கடை சுற்றுவட்டரப் பகுதிகளான நேசா் புரம் நாட்டாலம், பள்ளியாடி, வாகவிளை, விரிகோடு, கொல்லஞ்சி, காட்டவிளை, இடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 3 மணிமுதல் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.