புதுக்கடை பேருந்து நிலையத்தில் முன்சிறை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கடை பேரூராட்சித் தலைவா் ஜாக்லின் ரோஸ் கலா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஜெயமாலினி முன்னிலை வகித்தாா். முன்சிறை வட்டார சுகாதார நிலைய மருத்துவா் ஆன்சி பிரின்ஸ்லா பேசினாா். சுகாதார ஆய்வாளா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.