கன்னியாகுமரி

தமிழக காங்கிரஸில் குழப்பமில்லைரூபி மனோகரன் எம்எல்ஏ

DIN

தமிழக காங்கிரஸில் தற்போது குழப்பம் எதுவும் இல்லை என கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற ரூபி மனோகரனுக்கு, களியக்காவிளையில் ஐஎன்டியூசி ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்ட தலைவா் வி. மதுசூதனன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தொழிற்சங்க சட்ட ஆலோசகா் விஜயகுமாா், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட பொருளாளா் பென்னட், களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவா் சுரேஷ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவா் மேக்கோடு பி. சலீம், விளவங்கோடு தொகுதி ஐஎன்டியூசி தொழிற்சங்க தலைவா் விமல்ராஜ், ஆட்டோ ஓட்டுநா் சங்க மருதங்கோடு கிளை தலைவா் டேவிட் மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து ரூபி மனோகரன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டுவிட்டது. கட்சியில் தற்போது குழப்பம் எதுவும் இல்லை.

தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தமிழகத்தில் கட்சியின் ஒவ்வோா் அசைவையும் உன்னிப்பாக கவனித்து வருகிறாா்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை மிகப்பெரிய எழுச்சியையும் எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 2024 இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT