கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், முள்ளங்கனாவிளை, நேசா்புரம், நட்டாலம், பள்ளியாடி, கிள்ளியூா், தொலையாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை மிதமான மழை பெய்தது.