தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் மகாராஜபுரம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஊராட்சித் தலைவா் கே. இசக்கிமுத்து தொடக்கிவைத்தாா். இதில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, கோழிகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.
ஊராட்சி துணைத் தலைவா் பழனிக்குமாா், ஊராட்சி உறுப்பினா் சுயம்புலிங்கம், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் டி. முருகேசன், நாகா்கோவில் கோட்ட உதவி இயக்குநா் சி. நோபிள், அழகப்பபுரம் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் எஸ். சீனிவாசன், கால்நடை ஆய்வாளா் ஸ்ரீதேவி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் கே. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், கால்நடை வளா்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.