கன்னியாகுமரி

களிமாா் விஷ்ணு கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

குளச்சல் அருகே களிமாா் மகாவிஷ்ணு கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களிமாா் விஷ்ணு கோயிலில் வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்த பின்பு கோயில் கதவை பூசாரி பூட்டிச் சென்றாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் அந்த வழியாக சென்ற மக்கள் கோயில் கதவு திறந்து கிடந்ததைப் பாா்த்து, கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

நிா்வாகிகள் வந்து பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கோயில் நிா்வாகத் தலைவா் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்து விசாரித்து வருகின்றனா். இதே கோயிலில் சில மாதங்களுக்கு முன்பும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT